முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

* உறவுகள்  




முல்லைத் தீவில்
இறுதி நாளில்
விஷக்குண்டுகளின் விஷவாயுவில்
மூச்சுத் திணறி மூச்சை விட்ட
காக்கைக்குக்கூட சாவு விசாரிக்க உறவாய்
கூட்டம் கூட்டமாய் காக்கைகள்.....

மூச்சை விட்ட மனித உடல்களில்
ஈக்கள் மட்டும்....

க. சமுத்திரம், சிவகாசி.


* வாரியா புள்ள வாரியா?  



ஆத்தோரம் வீடு கட்டி
ஆனந்தமாய் ஆடிப் பாட
வாரியா?..... புள்ள வாரியா
வாரியா?..... புள்ள வாரியா

ஆத்தாடி அக்கம்பக்கம்
அரவச்சத்தம் கேக்குதய்யா
வேண்டாய்யா.... வேண்டாய்யா
வேண்டாய்யா....சொன்னா கேளய்யா

மாமரத்துத் தோப்புக்குள்ளே
மாங்கனியும் ஒன்னு தாரேன்
வாரியா?..... புள்ள வாரியா
வாரியா?..... புள்ள வாரியா

மாமன் உந்தன் பேச்சினிலே
மாயவலை பின்னுறியே
வேண்டாய்யா.... வேண்டாய்யா
வேண்டாய்யா....சொன்னா கேளய்யா

கொல்லிமலைக் காட்டுக்குள்ளே
கொம்புத் தேனும் நான் தாரேன்
வாரியா?..... புள்ள வாரியா
வாரியா?..... புள்ள வாரியா

சொக்குப் பொடி போடுறியே
சொக்க வைக்கப் பாக்குறியே
வேண்டாய்யா.... வேண்டாய்யா
வேண்டாய்யா....சொன்னா கேளய்யா

மஞ்சத்தாலி ஒன்னு தாரேன்
மாதரசி என்னத் தாரேன்
வாரியா?..... புள்ள வாரியா
வாரியா?..... புள்ள வாரியா

அப்போதும்தான் நானும் வாரேன்
எப்போதும்தான் இன்பம் தாரேன்
வேணும்யா....நீயும் வேணும்யா
வேணும்யா....நீயும் வேணும்யா

ஆத்து ஓரம் வீடு கட்டி
ஆனந்தமாய் ஆடிப்பாடி
வாழ்வோமே.... நாமும் வாழ்வோமே!
வாழ்வோமே.... நாமும் வாழ்வோமே!!

M.மீனாட்சிசுந்தரம், கோவில்பட்டி.
செல்லிடப்பேசி 9095854001.

* எரிந்தும் எரியாமலும்  


சட்டம் படிக்க திட்டமிட்டு
பட்டப்பகலிலேயே கலைந்தது
அந்த கனவு
விட்டத்தைப் பார்த்து வீட்டுக்குள்ளே
அடங்கிப்போனேன்

புகுந்தவீட்டு சுயாட்சியில்
புத்தம்பரப்ப சித்தம் கொண்டேன்
நித்தம் நித்தம் நடந்தும் எனக்கெதிராய்
வரதட்சணையுத்தம்!

முதுகலை தமிழ் படிக்க முயன்று
முயன்று மூர்ச்சையானேன்
மன மகிழ்ச்சியோடு மாமியார் தந்தாள்
மலடி என்ற பட்டம்
தீந்தமிழ்க்கற்று திக்கெட்டும்
தமிழ்ப்புகழ் பரப்ப
நினைத்ததென் மனம்.

திட்டமிடாத திடீர் திருமணம்
தீக்குண கணவரால் கருகியே போனேன்
ஆணாதிக்கச் சந்தேகத் தீயில்
சாதிக்க நினைத்து சேமித்து வைத்த
சிறுவயது சிந்தனைகள்
சிதறியும் எரிந்து என் இதயக் கூட்டுக்குள்ளேயே...

தே.ரம்யா, கொட்டக்குளம்.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* நான் நதி  


புகழ்ச்சியும்
இகழ்ச்சியும் ஒன்றுதான்
சென்று கொண்டே இருப்பேன்
போற்றுதலும்
புறக்கணிப்பும் ஒன்றுதான்
சென்று கொண்டே இருப்பேன்
பதிலுரைப்பதில்லை...
எதிர்ந்து நிற்பதில்லை... என்றும் போல
வென்று கொண்டே இருப்பேன்.

வே. ம. தமிழரசு, பரமத்தி.

சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009


* வலி  


வலியின்றி வாழ்வில் விடிவேது
வலிக்க வலிக்கப் பெற்ற
தாயிங்கு வாழும் தெய்வம்
மண்ணிலே வலியைச் சுமக்கும்
இதயமிருந்தால் வழுக்கல் இல்லை
வாழ்விலே உளியும் வலியைச்
சுமந்துதான் உயிரோவியச்
சிலையைப் படைக்கிறது
உளியாய்த் தன்னைத் தாங்கும்
மனமே உறவை மனிதர்க்குக் கொடுக்கிறது
உளியாய் மனத்தையாக்கிக் கொண்டால்
உள்வலிகளெல்லாம் கைளயவே
தெளிவாய் வாழ்வையாக்கிக் கொண்டால்
தேனாகி வலியும் தித்திக்குமே
எண்ணிப்பார்த்தால் வலிகள் எல்லாம்
ஏழைச்சிந்திய வியர்வைகளே
எண்ணிக்கையற்ற மனித வலிக்ளெல்லாம்
ஏற்றம் காணத துயரங்களே...

கவிச்சுரபி சுப.சந்திரசேரன், சென்னை.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* அடைமழை  


இருட்டாமல் உருட்டாமல்
"அடைமழை"
விவசாயியின் "வியர்வைத் துளி"

எம். பொன்னார்,மணப்பாறை.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* கறுப்பு நாய்  


ஒரு நேரத்தில் பின்னால் துரத்தும்
மறு காலத்தில் ஓடும் முன்னால்
உச்சி வெயிலில் ஒட்டியே வரும்
மிச்ச கட்டத்தில் பதுங்கியிருக்கும்
அந்த கறுப்பு நாயை
என்ன செய்யினும் குரைக்காது
அதன் பயம் மனதில் வாலாட்டும்.

வேலையேதுமின்றி
சும்மாவேனும் நடமாடும்
மனிதரைப் பொறுத்தே உருமாறும்.
வெறி பிடிக்காது ஒருவரையும் கடிக்காது
நம்மைவிட்டு துரத்திவே முடியாது,
இருக்கும் நாமுள்ள வரை.
இரவு வந்தால் இருக்காது.
பகலில் மட்டுமே பிரவேசிக்கும்

பொன்.குமார்,சேலம்.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* ஒரு பின்னரவில்...  


ஒரு பின்னரவில்
இறங்கத் தயங்குகின்றன
இவ்விரண்டு கண்ணிமைகள்

தலையணைகள் எவ்விதம் கடும்பாறையாயிற்று
காலகொண்ட மிதக்கின்ற கட்டில்
வெளியேறி உலவினால் வியப்பதற்கில்லை

புது வழக்குச் சீட்டில்
இவனது பேரை எழுதிக் கொண்டு போனது
உளவு பார்த்த காற்று

தலைமேலோர் கறும்பல்லி
விழுந்தோடித் தொலைந்தது
திரையில் ஒளிர்ந்த ரோஜாவை தண்டிக்க
திரை கிழித்தால் வழிவதோ என்குருதி

வேடிக்கை பார்த்தமனம்
இறுதியில் சொன்னது படுத்தால்
தூங்கும் யோகம் வேண்டுமா மோகத்தின்
பின்னால் அலைவதை நிறுத்து!

வசந்தராஜா,நெய்வேலி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* தேயும் வாழ்க்கை  


சாலையில் ஒரத்தில்
தேய்ந்து கிடக்கிறது
செருப்பு தைப்பவன் வாழ்க்கை
ஜா. பிராங்க்ளின்குமார்,மதுரை
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* நிலா  


எட்டிப் பார்த்தேன்
தூக்கிவிடச் சொன்னது
கிணற்றில் விழந்த நிலா
ஜெயந்தி ரேகா, திருச்ச்சி
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* மாறுபாடுகள்  


வண்ணப் பூக்கள் வாசம் கண்டு
நாளெல்லாம் நந்தவனம் கிடந்தேன்.
இறுதி ஊர்வலத்தில் இறைந்த
பூக்கள் கண்டு புன்னகை மறந்தேன்.


மழலை மொழி கவிதை கண்டும்
மாசற்ற புன்னகை கண்டும் மகிழ்வில்
புதைந்து போயிருந்தேன்.
பிச்சை புகும் பிஞ்சு கண்டு கலங்கிப் போனேன்.
புன்னகைக்கும் மனிதர் கண்டு பூவாய் மலர்ந்தேன்
முதுகுக்குப் பின் செய்யும் துரோகம் கண்டு
உடைந்து நிற்கின்றேன்.

எஸ். ஜனனி அந்தோணிராஜ், திருச்சி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* புத்தகம்  



புத்தகம் கூட கைத்தடி தான்

தூங்குபவனை தட்டி எழுப்பும்...

விழுந்தவனை தூக்கி நிறுத்தும்...


ஆங்கரை பைரவி, லால்குடி.

சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* துளிப்பா  


மீனுக்கு இரையாகாமல்
மிதக்கின்றது வெள்ளை அப்பம்"
குளத்தில் விழுந்த நிலா"

வி. தங்கராஜ் சென்னை.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* உண்ணாவிரதம்  


போடா போய்
உண்ணாவிரதத்தில் கலந்து கொள்...
தாய் விரட்டினாள்...

இங்கே ஏன் கிடக்கின்றாய்
எங்களோடு நீயும்
"பட்டினி" !
ஆலம் ஆனந்த மல்லிகை, கவுந்தப்பாடி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* வாழ்க்கை  


தாலி அறுத்தால் மனைவி...
மொட்டை போட்டான் மகன்...
கண்ணீரோடு சுற்றம்....
வெட்டியான் வீட்டில்
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி...

மதுரை முருகேசன், கவுந்தப்பாடி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* நாட்காட்டி  


நல்ல நேரத்தைக் காட்டி
தன் ஆயுளை குறைத்துக் கொண்டது
"நாட்காட்டி"


வே. சிவக்குமார். கவுந்தப்பாடி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* விறகோடு உறவாடி  


எனக்கு விவரம் தெரிந்த நாள்
முதலாய் வீட்டில் விறகு அடுப்பு தான்...
ஆனாலும் எனக்கு அதிகமாய் பிடித்த உணவை

எல்லாம் அடிக்கடி செய்யச் சொல்லி அடம் பிடிப்பேன்
அம்மாவும் சலிக்காமல் செய்து கொடுப்பாள்
வெளியூர் பயணமென்றால் நான் முழிக்கும் முன்பே
எப்படியாவது தயாராகிவிடும் எதாவது உணவு

கண் திறக்கக் கூட முடியாத நிலையில்
அம்மா காய்ச்சலில் விழுந்த சமயம்
கஞ்சி வைத்துத் தர வேண்டிய கட்டாயம்

எனக்குவெகு நேரம் போராடி விறகை பற்ற வைத்தேன்
எரிச்சலடைந்தது கண்கள்
விறகு தள்ளிய போது விரல்களில்

இரு கொப்புளங்கள்
கரித்துணி பிடித்து கஞ்சியை
இறக்குகையில் கையில் ஒரு சூடு
வெறுத்துப் போனேன்..

ஒரு வேலை கஞ்சிக்கே இத்தனை போராட்டமென்றால்?.....
அவசம் அவசரமாக ஓடிச் சென்று பார்த்தேன்
அம்மாவின் உள்ளங்கையை,
அரைத்த மருதாணிக்கு அடைக்கலம் கொடுத்து
அழகாய் இருக்க வேண்டிய தோல்

ஆமை ஓடாய் அழுத்தமேறிக் கிடந்தது.
அப்போது முடிவெடுத்தேன்
இனி பிடித்த உணவென்று எதுவும் வேண்டாம்
அம்மா "வடித்த உணவே" போதுமென்று...

அ. ராஜிவ்காந்தி. செய்யாறு.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* நீர்க்குமிழி  


வாழ்க்கை ஒன்றுமில்லை
உதடு சுழித்துச் சொல்கிறது
நீர்க்குமிழி
கொள்ளிடம் காமராஜ், திருச்சி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* அம்மா  


மறைத்தது அடுப்புப் புகை
அம்மாவின் கண்ணீரை..

மு. குமரன். பன்னத்தூர்.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009






* முரண்பாடு  


மூணாங்கிளாஸ் கூட படிக்காத முதலாளிக்கு
மூணு டிகிரி படித்தவன் வேலைக்கரனாய்...!
கால் வயிற்றுக் கஞ்சியின்றி கதறும் அந்த ஏழைக்கு
களியனமான பத்தாவது மாதமே பிள்ளை....!
கோயில் குளங்களில் குளித்து கோடிகளை கொட்டும்
குபேரனுக்கு பிள்ளை இல்லை...!
கேடியாய் இருப்பவன் கொடிகளிள் புரள்கிறான்
நேர்மையாய் இருப்பவன் நாலு காசின்றி மருல்கிறான்...!
கொலை காரனுக்கு மாலை போட்டு வீதியெங்கும் வரவேற்ப்பு
குருதி சிந்திய தியாகிக்கு ரோட்டோரமே படுக்கை விரிப்பு...!
சாக்கடையாய் பங்களாவிலே வாழ்கிறாள் விலைமகள்
சாக்கடை ஓரத்திலே சோறின்றி சாகின்றாள் குலமகள்....!
பன்னீரிலே குளிப்பவனுக்குப் பகலெல்லாம் விளையாட்டு
கண்னிரிலே கரைபவனுக்கு கனவில் கூட வேதனைப் பாட்டு....!
பாதாம் பருப்பும், பிரியாணியும் பகட்டாய் தின்னும்
பழையகஞ்சிககும் புலம்பும் மற்றொருவன்....!
வீதியெங்கும் உண்டு இந்த வித்தியாசம் விரைவில் விரட்டுவதே நம் சாகசம்...!

குடந்தை சந்திர பெருமாள்.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

* பூக்களைப் பறிக்காதீர்கள்  


நித்தம் சிரிக்கும்
அழகான பூஞ்செடியே...
நாளை சருகாகும்
பூவொன்றைத் தருவாயா?

உன்னைக் கிள்ளுவது
என்தனது எண்ணமல்ல...

ஓரிடத்திலேயே உனதருமை
உறைந்திடாது இருக்கவே
உனைநான் சூடிக்கொண்டு
உலாவரும் வரம் கேட்கிறேன்!

என்னினும் அழகான
சின்னஞ்சிறு பெண்பூவே...
உடனே சூடிக்கொள்
கிள்ளுவதற்கு கலங்காதே!

அலங்கரிப்பதாய் எண்ணிக்கொண்டு
பெரிய கத்திரியால் புண்ணாக்கும்
மீசைக்காரன் வரும் முன்னே
என்கனவை நிறைவு செய்!!


கந்தகப்பூக்கள்ஸ்ரீபதி - சிவகாசி

செல்லிட பேசி 98435 77110