முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

* வாரியா புள்ள வாரியா?  



ஆத்தோரம் வீடு கட்டி
ஆனந்தமாய் ஆடிப் பாட
வாரியா?..... புள்ள வாரியா
வாரியா?..... புள்ள வாரியா

ஆத்தாடி அக்கம்பக்கம்
அரவச்சத்தம் கேக்குதய்யா
வேண்டாய்யா.... வேண்டாய்யா
வேண்டாய்யா....சொன்னா கேளய்யா

மாமரத்துத் தோப்புக்குள்ளே
மாங்கனியும் ஒன்னு தாரேன்
வாரியா?..... புள்ள வாரியா
வாரியா?..... புள்ள வாரியா

மாமன் உந்தன் பேச்சினிலே
மாயவலை பின்னுறியே
வேண்டாய்யா.... வேண்டாய்யா
வேண்டாய்யா....சொன்னா கேளய்யா

கொல்லிமலைக் காட்டுக்குள்ளே
கொம்புத் தேனும் நான் தாரேன்
வாரியா?..... புள்ள வாரியா
வாரியா?..... புள்ள வாரியா

சொக்குப் பொடி போடுறியே
சொக்க வைக்கப் பாக்குறியே
வேண்டாய்யா.... வேண்டாய்யா
வேண்டாய்யா....சொன்னா கேளய்யா

மஞ்சத்தாலி ஒன்னு தாரேன்
மாதரசி என்னத் தாரேன்
வாரியா?..... புள்ள வாரியா
வாரியா?..... புள்ள வாரியா

அப்போதும்தான் நானும் வாரேன்
எப்போதும்தான் இன்பம் தாரேன்
வேணும்யா....நீயும் வேணும்யா
வேணும்யா....நீயும் வேணும்யா

ஆத்து ஓரம் வீடு கட்டி
ஆனந்தமாய் ஆடிப்பாடி
வாழ்வோமே.... நாமும் வாழ்வோமே!
வாழ்வோமே.... நாமும் வாழ்வோமே!!

M.மீனாட்சிசுந்தரம், கோவில்பட்டி.
செல்லிடப்பேசி 9095854001.