முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

கவிதை 13 க.சமுத்திரம்.  


தாயே! தாய்த்திருநாடே!
தமிழே! தமிழனங்கே!! நலமா!
நலமில்லை நாங்கள்!!!
கொத்துக் கொத்தாய்
குழந்தைகள்செத்து மடிந்த சேதி தெரியுமா?
குண்டு மழையில் எஞ்சியபேரின்கூக்குரல் கேக்கிறதா?

ராஜிவ் மரணம் ராஜதந்திரத்தின் சருக்கல்...
தனி நபர் கொலையில் கொள்கை மாற்றம் ஏற்படாது.,
மன்னிப்பு இல்லையா?....

பாரதமே...பாராமுகம் எத்தனை நாளைக்கு?
இந்தியாவே...இதயக்கதவு எப்போது திறக்கும்?
தமிழகமே...
தாயிருந்தும் நாங்கள் அனாதைகளா?
இது யுத்தபூமியின்
புலம்பலில்லைதாயிடம் சேயின் பாசக்குரல்...

பாதையைடத்து பட்டினிபோட்டு பணிய வைக்க
சிங்களம் துடிக்கிறது...
எங்கள் கடைசி நபரின் கடைசி லட்சியமும்
சுதந்தரத்தைச் சுவாசிக்கவே...
எங்கள் மண்ணின் அருகம்புல்கூட கருகிச்சாகுமே
தவிர அடிமை மண்ணில் முளைக்காது...

விடியலுக்காக
கதிரவனைக் கட்டியிழுத்து வரவே
வளைக் கரமும் துப்பாக்கி தூக்குகிறது...
இசையும், நாட்டியமும், பாட்டும்,
கூத்தும், காதலும்,
கவிதையும்கொஞ்சம் மிச்சமிருக்கிறது...
கவிதை எழுத பேனா
தேடினால்எல்லா அலமாரிகளிலும் துப்பாக்கிகளே...
பிஞ்சுளே ஓவியமாக யுத்தகாட்சியையே வரைய...
ரோஜாக்களும், மல்லிகைகளும் ஏவுகணைகளை இயக்க...
அரும்பு மீசைகள் பீரங்கிகளை முடுக்க...
யுத்தமே வாழ்வாய்....வாழ்வே யுத்தமாய்....
நாடித் துடிப்புகளில் எப்போதுமே குண்டுச் சத்தமாய்
வாழும் எங்களுக்குதாயே...
தமிழே...
தமிழனங்கே...
மன்னிப்பே இல்லையா?

க.சமுத்திரம். செல்லிடப்பேசி +919940919766