முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

கவிதை 16 - ஜெ. செண்பகராஜன்  

எங்கு தேடியும் கிடைக்கவில்லை
சமூகத்தைச் சலவை செய்ய
ஒரு "சலவைக்கட்டி"


ஜெ. செண்பகராஜன்,
விருதுநகர்.
செல்லிப்பேசி: 9442094011.

கவிதை 17 - ஓவியர் கல்யாணசுந்தரம்  


வெட்டரிவாளும் வீச்சரிவாளும்
எட்டயபுரத்துப் பட்டயக் கவிஞனின்
மீசையைப் பார்த்த பின்தான்
வடிவமைக்கப்பட்டதெனச்
செவி வழிச் செய்தி....

கற்றவனுக்கு நூல் சொந்தம் என
இவன் செய்த கர்ஜனை "நூல்களுக்கும் "
இவனுக்கும் இடைவெளி நூறு காதம்...

முண்டாசுக் கவியின் பல அசைவுகள்
வெண்தாடி, கருஞ்சட்டை,
செவ்வங்கியை நோக்கியே
சென்றதால் பஞ்சகச்சங்கள்
பாய்ந்து பிராண்டியது, ஆறாவது
விரலின் பழமை நகத்தால்...

கடலில் உதிப்பவனே எதிர்த்தாலும்
காலில் உதித்தவனை தலையில் சுமப்பதே
சாபல்யம் எனமுரசெழுப்பிய அந்த வாளும்,
கேடயமும் எச்சங்களை
இறுதிவரை தீண்டவேயில்லை......

ஓவியர் கல்யாணசுந்தரம்,
சிவகாசி.
செல்லிடப்பேசி +91 99946 93182.

கவிதை 14 - டாக்டர் சாந்திலால்.  


அன்பு பாரதி! வாழிய நலம்!!


நீ நலமா? செல்லம்மா நலமா?


உன் அன்புக் குழந்தைகள் நலமா?


காக்கை குருவி கழுதை நலமா?


இங்கு யானை கோழி ஆடு நலம்...
தேர்தலுக்குத் தேர்தல் ஓரணியிலிருந்து மற்றொன்றுக்கு


வானரங்களாய்த் தாவும் கட்சிப்பிழைகள் நலம்...
ஆட்சி மாறியதும் அஞ்சி அஞ்சி


நீதிக்கூண்டில் கரணம் போடும் சாட்சிப் பிழைகள் நலம்...
இடிப்பபாரை யெல்லாம் ஏமரா மன்னன்


சிறைச்சாலை அனுப்பும் ஆட்சிப் பிழைகள் நலம்...


போலி பக்தர்கள் சுதேசிச் சாமியார்கள்


அரசியல் எத்தர்கள் தொலைக்காட்சிகப் பித்தர்கள் நலம்...
புள்ளிராஜாக்கள், கரும்புள்ளி மந்திரிகள்


மில்லி ராஜாக்கள் டாஸ்மார்க் கடைகள் நலம்...


சுருங்கக் கூறின் இங்கு...
அன்னைத் தமிழைத் தவிர அனைத்தும் நலம்...


அங்கு உன் நலமறிய ஆவல்...


இப்படிக்கு உன் அன்புத்தோழன்

டாக்டர் சாந்திலால். இராசபாளையம்.

தொலைபேசி: 04563 221883

கவிதை 15 - எஸ்.ஆர்.கே. நந்தன்  


ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம்
குழந்தைகளோடு வேடிக்கை பார்த்து
வாசலில் அமர்ந்திருப்பேன் நான்...
கடைக்குச் சென்று ஏதேனும்
வாங்கி வரச் சொல்லி
என் மெளனம் கலைப்பாய் நீ....
பரபரப்பான அலுவலகம் முடிந்து
அமைதியாய் வீடு திரும்புவேன் நான்...
மத்தியான உணவின் பக்குவம் கேட்டு
என் மெளனம் கலைப்பாய் நீ...
மாத இறுதி வெள்ளிக்கிழமையில்
ஆலயம் சென்று பிரகாரம் சுற்றி
முன் மண்டபம் அமர்வேன் நான்...
புதிதாய் கோரிக்கை வைத்து
என் மெளனம் கலைப்பாய் நீ...
முதல்தேதி சம்பளத்தில் அத்தனைக்கும்
பட்ஜெட் போட்டு பற்றாக்குறையில்
பரிதவிப்பேன் நான்...
ஆறுதல் சொல்லியபடியாய்
என் மெளனம் கலைப்பாய் நீ...
ஆனால் நமக்கிடையேயான
சின்னச் சின்ன சண்டைகளில் மட்டும்
எப்படி எதிர்பார்க்கின்றாய்?
நமக்கான மெளனத்தை நான்தான் முதலில்
கலைக்க வேண்டுமென்று...

எஸ்.ஆர்.கே. நந்தன்.
இராஜபாளையம்,
செல்லிப்பேசி