முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

கவிதை 15 - எஸ்.ஆர்.கே. நந்தன்  


ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம்
குழந்தைகளோடு வேடிக்கை பார்த்து
வாசலில் அமர்ந்திருப்பேன் நான்...
கடைக்குச் சென்று ஏதேனும்
வாங்கி வரச் சொல்லி
என் மெளனம் கலைப்பாய் நீ....
பரபரப்பான அலுவலகம் முடிந்து
அமைதியாய் வீடு திரும்புவேன் நான்...
மத்தியான உணவின் பக்குவம் கேட்டு
என் மெளனம் கலைப்பாய் நீ...
மாத இறுதி வெள்ளிக்கிழமையில்
ஆலயம் சென்று பிரகாரம் சுற்றி
முன் மண்டபம் அமர்வேன் நான்...
புதிதாய் கோரிக்கை வைத்து
என் மெளனம் கலைப்பாய் நீ...
முதல்தேதி சம்பளத்தில் அத்தனைக்கும்
பட்ஜெட் போட்டு பற்றாக்குறையில்
பரிதவிப்பேன் நான்...
ஆறுதல் சொல்லியபடியாய்
என் மெளனம் கலைப்பாய் நீ...
ஆனால் நமக்கிடையேயான
சின்னச் சின்ன சண்டைகளில் மட்டும்
எப்படி எதிர்பார்க்கின்றாய்?
நமக்கான மெளனத்தை நான்தான் முதலில்
கலைக்க வேண்டுமென்று...

எஸ்.ஆர்.கே. நந்தன்.
இராஜபாளையம்,
செல்லிப்பேசி

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories