முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

நகரத்து மழை  


‘‘உக்கிரமாய் தாக்கும் வெயினூடே
இதமாய் வருடி இன்பம் சேர்க்கும்
இனிய மழையே வா''
‘‘இடி மின்னலோடு
கருமேகக் கூட்டம் காட்டி விட்டாய்
சுடுமண் தரை தொட
இன்னும் என்ன யோசனை?''
‘‘பள்ளி சென்றகுழந்தை
வீடு திரும்பும் நேரம்
மழையே கொஞ்சம் தாமதிப்பாயா?''
‘‘காகித பண்டல்களை
உள்ளே எடுத்துப் போடு
மழை வந்து தொலைக்கப் போகிறது''
‘‘பேருந்திருந்து இறங்குவதற்குள்
மழை நின்று விட்டால் நல்லது
ஈரம் படாமல் இறங்கி விடலாம்''
‘‘துவைத்துப் போட்ட துணிகள்
மொட்டை மாடியில்
நனைந்து விடலாம் மறுபடியும்''
‘‘அனைவரின் வேண்டுகோள்களையும்
செவிசாய்த்தபடி
மெதுவே நகர்ந்தது நகரத்து மழை''.

எஸ். ஓ. வீரன்
சிவகாசி, இந்தியா. பேச: +919843979097

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories