முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

மௌனம் பேசும் வார்த்தை  


குளிர் காலத்தின் இரவொன்றில்
நீ எனக்கப் போர்த்திய போர்வையில்

உன் பிரியத்தின் கதகதப்பை உணர்ந்தேன்

.

மழைக்காலத்தின்

மாலை நேரத்தில்

நீ தந்ந தேனீரை விட

சுவையாக இருந்தது

உனது அன்பான முத்தம்

.

அறை முழுக்க

மின் விளக்குகள் ஒளிர்ந்தாலும்

நீ இல்லாத அறை

இருண்மையை எனக்குள் தடம் பதித்தது

.

"வான்கா"வின் நவீன ஓவியத்தைப் போன்று

என் உணர்வுகளைப்

புரிந்து கொள்ளாமல்

நீ ஊடலிடும் சமயத்தில்

உதிர்க்கும் வதைச்சொல்

உன் மனதின் வன்மத்தை

எதிரொலித்தது.


ஊடலுக்குப் பிறகு

சங்கீதமாய் ஒலிக்கும்

உனது சமாதான முயற்சியான

ெமல்லிய குரல்

ஆயிரம் அதிர்வலைகளைப் பிரசவிக்கும்

.

தனிமையில் நான் இருக்கும் தருணத்தில்

உன் புகைப்படத்தின் வழியே கசியும்

மௌனம் பேசும் வார்த்தைகளை

யாரால் கவிதையாக மொழி பெயர்க்க முடியும்?

.

நீலநிலா செண்பகராஜன், விருதுநகர், இந்தியா



What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories