முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

விவசாயியின் வி(உ)ளைச்சல்  


அரசியல்வாதிகளே நில்லுங்கள்
தேசியமயமாக்கலே நொண்டியடிக்கும்போது
உலகமயமாக்கலுக்காய் ஏன் இந்த ஓட்டம்?

அண்டை மாநிலத்திடமிருந்து
நீர் வாங்க வக்கில்லாதபோது....
அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் வாங்க மட்டும்
ஆளாய் பறப்பதேன்?

ஒன்று எங்கள் நிலத்திற்கு
நீர் வார்த்துப் போங்கள்....
இல்லை எங்களுக்கு
பால் வார்த்துப் போங்கள்....

நீர் இருப்பதில்லை
நீர் இருந்தால் மின்சாரம் இருப்பதில்லை.....


விளைச்சல் இருப்பதில்லை
விளைச்சல் இருந்தால் விலை இருப்பதில்லை.....

இனி எங்கள் கடனோடு சேர்த்து
எங்களையும் தள்ளுபடி செய்யுங்கள்
விலை போவதற்கு
என்ன இருக்கிறது?
எங்களைத் தவிர...

யானை கட்டி போரடித்த மண்ணில்
காலிப் பானை உருட்டும் எங்கள் பிள்ளைகள்....

விதை நெல்லுக்கும் காயடிக்கும்
உங்கள் உலகமயமாக்களில்
எங்களை அடித்து உளையில் போடும்
தேசியம் வெறும் வேசியம்....

கர்நாடகா பொன்னியும்
பஞ்சாப் கோதுைமயும்
மைசூர் பருப்பும்
தீர்க்கட்டும் இனியென்
தமிழ்நாட்டுப் பசியை...

சரி எங்கள் வீட்டுப் பட்டிணியை?

பாண்டூ. சிவகாசி, இந்தியா.

*** நெருப்பூ விதை *** தமிழ் சினிமா **** புத்தகங்கள் *** சிறுகதைகள் *** ஈழ நெருப்பூ *** கந்தகப் பூக்கள் சிற்றிதழ் ***

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories