முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

ஆட்டோகிராப்  



குளம் வற்றத்தொடங்கியதும்

ஊர் திரும்பும்
.
அயல் தேசத்து பறவைகள்...

.
கரை நெடுகிலும்

காய்ந்தும், காயாலும்

கையெழுத்திடப் பட்டுருந்தன

"ஆட்டோகிராப்புகள்"

பா. தியாகு,
கோயம்புத்தூர், இந்தியா.

எங்கே நிம்மதி  











.
வாழ்வின் ஆதாரமே

கேள்விக்குறியாய்...

சூழும் துன்பங்களே

சூறாவளியாய்...

.

ஆறாத கடுந்துயரத்தில்

சுழன்று ஆர்ப்பரிக்கும்

கவலைக் கடலலையில்

உடல் நோக

தடம் புரணடு இடந்தெரியாமல்

இன்னலுரும் இழி நிலை

ஈழத்தமிழர் வாழ்வின்

இழிநிலை இன்னமும்...

.

சின்னப்புத்தி சிங்களச் சிப்பாய்களின்

கடுந் தோட்டாக்களுக்கு

சின்னாபின்னமானது

புனிதமான புத்த விகாரமும் தான்..

.

நிராதரவாக ஆதரவி தேடி

ஈழத்து வீதிகளில்

புத்தரே பழுத்த துனபத்துடன்

அலையும் அவல நிலை...

.

ஈழத்து பழச்சந்தையில்

பழக்குவியலுக்குப் பதிலாக

ஈழத்தமிழரின் பிணக்குவியல்கள்...

.

இறந்த ஈழப்பிஞ்சுகளின்

வதைபட்ட பூவுடலைப்

புதைத்திட ஆழ்மயாணத்தில்

சிறிதும் இடமில்லை...

.

ஈழத்துக் குழாய்களில்

குடிநீருக்குப் பதிலாகக்

குமுறும் ஈழத்தமிழரின்

இரத்தப் பிரவாகம்....

.

பிறந்த குழந்தை வாயில்

பாலுக்குப் பதில்

கொல்லப்பட்ட தாயின் இரத்தம்...

.

இருமடங்காய் ஒலிக்கும்

கொதிக்கும் என் இரத்தத்தின் வலி...

என்று மாறும் எம்மக்கள் இழிநிலை...

எழுந்திடு தமிழே... தமிழினமே....

.

கலைத்தாமரை,

மதுரை, தமிழ்நாடு, இந்தியா

மாடுகள் யோசிப்பதில்லை  



வெட்டு குத்துக்கள்
விமரிசையாய்

வீதிக்கு வீதி நடக்கும

"சாதிகள்" யோசிப்பதில்லை...

 

கலவரங்களில்

கையோ காலோ

கட்டியவன் தாலியோ

பறிபோகும

"மதங்கள்" யோசிப்பதில்லை...

 

ஆத்தா ஆத்தங்கைரயில

அப்பன் குளத்தங்கரையில

உயிர் துறந்து பிணங்களாய

"காதல்" யோசிப்பதில்லை....

 

தகுதியற்றவன் தலைவனாக

"தலை" நிமிர்ந்தததை இறைவனாக

தரம் பிரிக்கத் தெரியாத

"ம(ா)க்கள் யோசிப்பதில்லை....

 

முன்புற வாயிலில் தீனியும

பின்புற வாயிலில் சாணியும

ஆம் "மாடுகளும் யோசிப்பதில்லை"

 

ஆல. தமிழ்ப்பித்தன்,

புனல்வேலி, பொட்டல்பட்டி அஞ்சல்.

தமிழ்நாடு, இந்தியா.