முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

குறுங்கவிதை  


லாரி ஏறி
செத்தது...
'நதி'

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
+91 98435 77110
சிவகாசி, இந்தியா.

அவனின் மெளனங்கள்......  


மொட்டவிழ்த்த மலர்கள் மீண்டும் கூம்பிக்கொண்டன
கட்டவிழ்த்த மழைத்துளிகள் மீண்டும் கருமுகிலினுள்
ஒளிந்து கொண்டன
அவளின் துயர் கண்டு.......

காற்றிடம் கதை பேசிய காலங்களில்
சேகரித்துக் கொண்டாள்
சிறு காதல் தேனியாக அவன் மெளனங்கள

அமைதியாக உறைந்திருந்த அவன் மெளனங்கள்
மெல்லக் கதை பேசத் தொடங்கின அவளுடன

அம் மெளனங்களின் மொழி புரியாமல் திகைத்தவள்
துடிக்கத் தொடங்கினாள

பதறினாள் கதறினாள்
துடித்தாள் துவண்டாள

களைத்து உட்கார்ந்தாள்
அவன் நினைவுகளின் மடியில

மெதுவாக மிக மெதுவாக
அவள் செவிப்பறையில் சடுதியான ஒரு மோதல

அவள் கண்கள் மலர்ந்தன
கண்ணீர் பூக்கள் உதிர்ந்தன
உதடுகள் மட்டும் இறுகப்பூட்டியிருந்தன
சாவியைத் தொலைத்து விட்ட

ஆமாம்,
அவள் மொழி பெயர்த்துக் கொண்டாள்
அவன் மெளனங்களை தன் மெளனங்களால

அவன் மெளனங்கள் கூட
அவளுக்காக மட்டுமே எழுதப் பட்ட
மொழிகளல்லவா......

"தேவா"

"அம்மா"  


ஈரம் படர்ந்த விழிகள்
மெல்லச் சிரிக்க
உயிரை உருட்டிய வலிகள்
மெல்ல விலக‌
பூமித் தொட்டிலில்
தன் எச்சமாய் விழுந்த என்னை
தன் ஈரமுத்தத்தால் சுத்தமாக்கினாள்
"என் அம்மா"
"சிந்து"