முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

கவிதை 17 - ஓவியர் கல்யாணசுந்தரம்  


வெட்டரிவாளும் வீச்சரிவாளும்
எட்டயபுரத்துப் பட்டயக் கவிஞனின்
மீசையைப் பார்த்த பின்தான்
வடிவமைக்கப்பட்டதெனச்
செவி வழிச் செய்தி....

கற்றவனுக்கு நூல் சொந்தம் என
இவன் செய்த கர்ஜனை "நூல்களுக்கும் "
இவனுக்கும் இடைவெளி நூறு காதம்...

முண்டாசுக் கவியின் பல அசைவுகள்
வெண்தாடி, கருஞ்சட்டை,
செவ்வங்கியை நோக்கியே
சென்றதால் பஞ்சகச்சங்கள்
பாய்ந்து பிராண்டியது, ஆறாவது
விரலின் பழமை நகத்தால்...

கடலில் உதிப்பவனே எதிர்த்தாலும்
காலில் உதித்தவனை தலையில் சுமப்பதே
சாபல்யம் எனமுரசெழுப்பிய அந்த வாளும்,
கேடயமும் எச்சங்களை
இறுதிவரை தீண்டவேயில்லை......

ஓவியர் கல்யாணசுந்தரம்,
சிவகாசி.
செல்லிடப்பேசி +91 99946 93182.

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories