முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

* விறகோடு உறவாடி  


எனக்கு விவரம் தெரிந்த நாள்
முதலாய் வீட்டில் விறகு அடுப்பு தான்...
ஆனாலும் எனக்கு அதிகமாய் பிடித்த உணவை

எல்லாம் அடிக்கடி செய்யச் சொல்லி அடம் பிடிப்பேன்
அம்மாவும் சலிக்காமல் செய்து கொடுப்பாள்
வெளியூர் பயணமென்றால் நான் முழிக்கும் முன்பே
எப்படியாவது தயாராகிவிடும் எதாவது உணவு

கண் திறக்கக் கூட முடியாத நிலையில்
அம்மா காய்ச்சலில் விழுந்த சமயம்
கஞ்சி வைத்துத் தர வேண்டிய கட்டாயம்

எனக்குவெகு நேரம் போராடி விறகை பற்ற வைத்தேன்
எரிச்சலடைந்தது கண்கள்
விறகு தள்ளிய போது விரல்களில்

இரு கொப்புளங்கள்
கரித்துணி பிடித்து கஞ்சியை
இறக்குகையில் கையில் ஒரு சூடு
வெறுத்துப் போனேன்..

ஒரு வேலை கஞ்சிக்கே இத்தனை போராட்டமென்றால்?.....
அவசம் அவசரமாக ஓடிச் சென்று பார்த்தேன்
அம்மாவின் உள்ளங்கையை,
அரைத்த மருதாணிக்கு அடைக்கலம் கொடுத்து
அழகாய் இருக்க வேண்டிய தோல்

ஆமை ஓடாய் அழுத்தமேறிக் கிடந்தது.
அப்போது முடிவெடுத்தேன்
இனி பிடித்த உணவென்று எதுவும் வேண்டாம்
அம்மா "வடித்த உணவே" போதுமென்று...

அ. ராஜிவ்காந்தி. செய்யாறு.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories