முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

கவிதை 8 - கனிமொழி கருப்பசாமி  

இன்னும் பாமரனாய்...

வான் முட்டும் மலைகளையும்
பறந்து கடக்கிறோம்!

பயமுறுத்தும் ஆழ்கடலையும்
நீந்திக் கடக்கிறோம்!

பூமிப் பந்தில் யார் எங்கிருப்பினும்
நொடியில் பேசி மகிழ்கிறோம்!

நோய் பிடித்த உடல் உறுப்பை
வெட்டி எறிந்து புது உடையாய்
வேறொன்றை மாற்றிக் கொள்கிறோம்!

விட்டுப் போகும் உயிரை
எட்டிப் பிடித்து
கட்டிப் போடுகிறோம்!

ஆண் பெண் உறவின்றி
உயிரினத்தை உருவாக்கி
அறிவில் ஆண்டவனை
தொட்டு விட்டோம்!

ஆனால்...

இன்னும் ஏழையின்
வயிற்றில் பற்றி எரியும்
பசி நெருப்பை
அணைத்திட வழி தெரியாது
பாமரனாய் விழிக்கின்றோம்!!

- கனிமொழி கருப்பசாமி-

What next?

You can also bookmark this post using your favorite bookmarking service:

Related Posts by Categories