முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

ஹைக்கூ  

புள்ளி வைத்து/
கோலமிடாமல் சென்றது/
தூறிடும் வானம்..
.
யுவபாரதி, கந்தகப்பூக்கள்

யுவபாரதி கந்தகப்பூக்கள்

மோடி மஸ்தான்.  

மோடி மஸ்தான்.
ஒரு முக்கிய வீதி
வித்தை காட்டிக் கொண்டிருந்தார் அவர்
கண் முன்னே ஜாலம் செய்தார்
நம்பாதவன் இரத்தம் கக்குவான் என்றார்
கூட இருந்த குடுமிகளும்
என்னுடன் இருந்தவரும்
ஆமாம் என்றனர்
என் பையிலிருக்கும்
10 ரூபாயை கணக்காய்ச் சொன்னார்
நண்பனிடம் நான்கு ரூபாய்
கணக்கும் வந்தது
துண்டில் போடப்பட்ட ரூபாய்த் தாள்கள்
காற்றில் பறக்க
காற்றை நிறுத்துவேன் என்றார்
காற்று நின்று போனது
களவாட ஒரு பூதம் வந்தது
பூதத்தை அழிப்பதாகக் கூறினார்
பூதம் புறமுதுகிட்டு ஓடியது
தாள்கள் நசுங்கியது பாவமென்றார்
புதியதாய் மாற்ற புது மந்திரமிட்டார்
தாள்கள் புதியதாயின
தாள்கள் கிழியும் கவலைவேண்டாம்
அட்டை தருவதாகச் சொன்னார்
அட்டை மந்திரம் இரகசியமானது
கண்ணை மூடுங்கள் என்றார்
அனைவரும் கண்ணை மூடினார்
வேடிக்கை பார்த்தபடி
வேண்டாமென்றேன் நான்
ஆகா, ஓகோ வின் பணமும்
குடுமிகள் கூட்டத்தோடு
கூடையுடன் போனது
துணியில் புரண்ட ரூபாய்த் தாளோடு
பூதம் ஓடிய திசையில்
சுருட்டிக் கொண்டு ஓடினார்
மோடி மஸ்தான்.
.
யுவபாரதி, கந்தகப்பூக்கள்

வர்ணஜாலம்  


















வர்ணங்களே வாழ்க்கை
மாறும் வர்ணமாய் மாறும்
நம் வாழ்வு,,,,

அன்னை தெரசாவின் அகம் தொட்ட வெண்மை
தாய்மையாய் மனதில் ஏறி ஊறி
அன்பு மயத்தில் ஒழிந்து போனது
பல நோயோடு தொழுநோய்...

காவி நிறம் எடுத்து விவேகானந்தமாய்
கடும் சொல் தவிர்த்து
சமுதாயம் வாழ... மீள
வழி பல உரைப்பார் பல தவத்திருக்கள்...

வானம் பொழிய வழிந்த நீரில்
வர்ணம் ஏற்றிய விவசாயி பசுமையாக்கினான்
கொடும்பசியாறியது உலகம்...

ஜார் கொடுமையில் வழிந்த 
இரத்த நிறம் தொட்டான் ஒருவன்
செவ்வண்ணம் ஏறி 
விடுதலை விடுதலையென 
கூவிக் களித்தன பல புரட்சிப்பூக்கள்....

இன்றும் பல வர்ணங்கள் பல விதமாய்
தன்நிறம் தொட்டவர் நிறம் மாற்றி
மகிழ்வாய் அழகாய் இருக்க...

ஏனோ?
வர்ணஜாலம் காட்டி
தொட்ட வர்ணமெல்லாம் ஏற்று
சுயநலமாய் வாழக் கற்றுக்கொண்டது
பச்சோந்தி.
                                                 -யுவபாரதி, கந்தகப்பூக்கள்,
                                                                சிவகாசி.

ஹைக்கூ - haikoo  


சும்மா கிடந்த கல்
உளி செய்த வேலை
சும்மா இல்லை மனிதர்கள்

இலக்கியராஜா
சிவகாசி. இந்தியா.
பேச:+919487402736

நகரத்து மழை  


‘‘உக்கிரமாய் தாக்கும் வெயினூடே
இதமாய் வருடி இன்பம் சேர்க்கும்
இனிய மழையே வா''
‘‘இடி மின்னலோடு
கருமேகக் கூட்டம் காட்டி விட்டாய்
சுடுமண் தரை தொட
இன்னும் என்ன யோசனை?''
‘‘பள்ளி சென்றகுழந்தை
வீடு திரும்பும் நேரம்
மழையே கொஞ்சம் தாமதிப்பாயா?''
‘‘காகித பண்டல்களை
உள்ளே எடுத்துப் போடு
மழை வந்து தொலைக்கப் போகிறது''
‘‘பேருந்திருந்து இறங்குவதற்குள்
மழை நின்று விட்டால் நல்லது
ஈரம் படாமல் இறங்கி விடலாம்''
‘‘துவைத்துப் போட்ட துணிகள்
மொட்டை மாடியில்
நனைந்து விடலாம் மறுபடியும்''
‘‘அனைவரின் வேண்டுகோள்களையும்
செவிசாய்த்தபடி
மெதுவே நகர்ந்தது நகரத்து மழை''.

எஸ். ஓ. வீரன்
சிவகாசி, இந்தியா. பேச: +919843979097

நகரத்து மழை  


‘‘உக்கிரமாய் தாக்கும் வெயினூடே
இதமாய் வருடி இன்பம் சேர்க்கும்
இனிய மழையே வா''
‘‘இடி மின்னலோடு
கருமேகக் கூட்டம் காட்டி விட்டாய்
சுடுமண் தரை தொட
இன்னும் என்ன யோசனை?''
‘‘பள்ளி சென்றகுழந்தை
வீடு திரும்பும் நேரம்
மழையே கொஞ்சம் தாமதிப்பாயா?''
‘‘காகித பண்டல்களை
உள்ளே எடுத்துப் போடு
மழை வந்து தொலைக்கப் போகிறது''
‘‘பேருந்திருந்து இறங்குவதற்குள்
மழை நின்று விட்டால் நல்லது
ஈரம் படாமல் இறங்கி விடலாம்''
‘‘துவைத்துப் போட்ட துணிகள்
மொட்டை மாடியில்
நனைந்து விடலாம் மறுபடியும்''
‘‘அனைவரின் வேண்டுகோள்களையும்
செவிசாய்த்தபடி
மெதுவே நகர்ந்தது நகரத்து மழை''.

எஸ். ஓ. வீரன்
சிவகாசி, இந்தியா. பேச: +919843979097

நகரத்து மழை  


‘‘உக்கிரமாய் தாக்கும் வெயினூடே
இதமாய் வருடி இன்பம் சேர்க்கும்
இனிய மழையே வா''
‘‘இடி மின்னலோடு
கருமேகக் கூட்டம் காட்டி விட்டாய்
சுடுமண் தரை தொட
இன்னும் என்ன யோசனை?''
‘‘பள்ளி சென்றகுழந்தை
வீடு திரும்பும் நேரம்
மழையே கொஞ்சம் தாமதிப்பாயா?''
‘‘காகித பண்டல்களை
உள்ளே எடுத்துப் போடு
மழை வந்து தொலைக்கப் போகிறது''
‘‘பேருந்திருந்து இறங்குவதற்குள்
மழை நின்று விட்டால் நல்லது
ஈரம் படாமல் இறங்கி விடலாம்''
‘‘துவைத்துப் போட்ட துணிகள்
மொட்டை மாடியில்
நனைந்து விடலாம் மறுபடியும்''
‘‘அனைவரின் வேண்டுகோள்களையும்
செவிசாய்த்தபடி
மெதுவே நகர்ந்தது நகரத்து மழை''.

எஸ். ஓ. வீரன்
சிவகாசி, இந்தியா. பேச: +919843979097

நகரத்து மழை  


‘‘உக்கிரமாய் தாக்கும் வெயினூடே
இதமாய் வருடி இன்பம் சேர்க்கும்
இனிய மழையே வா''
‘‘இடி மின்னலோடு
கருமேகக் கூட்டம் காட்டி விட்டாய்
சுடுமண் தரை தொட
இன்னும் என்ன யோசனை?''
‘‘பள்ளி சென்றகுழந்தை
வீடு திரும்பும் நேரம்
மழையே கொஞ்சம் தாமதிப்பாயா?''
‘‘காகித பண்டல்களை
உள்ளே எடுத்துப் போடு
மழை வந்து தொலைக்கப் போகிறது''
‘‘பேருந்திருந்து இறங்குவதற்குள்
மழை நின்று விட்டால் நல்லது
ஈரம் படாமல் இறங்கி விடலாம்''
‘‘துவைத்துப் போட்ட துணிகள்
மொட்டை மாடியில்
நனைந்து விடலாம் மறுபடியும்''
‘‘அனைவரின் வேண்டுகோள்களையும்
செவிசாய்த்தபடி
மெதுவே நகர்ந்தது நகரத்து மழை''.

எஸ். ஓ. வீரன்
சிவகாசி, இந்தியா. பேச: +919843979097

எது கவிதை?  

எது கவிதை?

வார்த்தைதயின் அடுக்கலா?
இலக்கணத்தின் அடிதொடுதலிலா?
அகந்தையின் அடியை அடிகளில் வைப்பதிலா?
தலைமை தேடும் மை எழுத்திலா?
எது கவிதை?
அட நம் எண்ணங்கள் அழகாய் சொல்லப்படுகிறதே என
எந்த வார்த்தைகள் எண்ண வைக்கின்றதோ
அது கவிதை என்றார் ஒருவர்
ஆம் என் எண்ணங்கள் பல கவிதையாகி இருக்கின்றன
பலரின் வரிகளில்...
என் கவிதைத் தாள்களோ வெள்ளையாகவே இருக்கின்றன....
யுவபாரதி, கந்தகப்பூக்கள்,
சிவகாசி, இந்தியா.
+9198437 53894

குறுங்கவிதை  


லாரி ஏறி
செத்தது...
'நதி'

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
+91 98435 77110
சிவகாசி, இந்தியா.

அவனின் மெளனங்கள்......  


மொட்டவிழ்த்த மலர்கள் மீண்டும் கூம்பிக்கொண்டன
கட்டவிழ்த்த மழைத்துளிகள் மீண்டும் கருமுகிலினுள்
ஒளிந்து கொண்டன
அவளின் துயர் கண்டு.......

காற்றிடம் கதை பேசிய காலங்களில்
சேகரித்துக் கொண்டாள்
சிறு காதல் தேனியாக அவன் மெளனங்கள

அமைதியாக உறைந்திருந்த அவன் மெளனங்கள்
மெல்லக் கதை பேசத் தொடங்கின அவளுடன

அம் மெளனங்களின் மொழி புரியாமல் திகைத்தவள்
துடிக்கத் தொடங்கினாள

பதறினாள் கதறினாள்
துடித்தாள் துவண்டாள

களைத்து உட்கார்ந்தாள்
அவன் நினைவுகளின் மடியில

மெதுவாக மிக மெதுவாக
அவள் செவிப்பறையில் சடுதியான ஒரு மோதல

அவள் கண்கள் மலர்ந்தன
கண்ணீர் பூக்கள் உதிர்ந்தன
உதடுகள் மட்டும் இறுகப்பூட்டியிருந்தன
சாவியைத் தொலைத்து விட்ட

ஆமாம்,
அவள் மொழி பெயர்த்துக் கொண்டாள்
அவன் மெளனங்களை தன் மெளனங்களால

அவன் மெளனங்கள் கூட
அவளுக்காக மட்டுமே எழுதப் பட்ட
மொழிகளல்லவா......

"தேவா"

"அம்மா"  


ஈரம் படர்ந்த விழிகள்
மெல்லச் சிரிக்க
உயிரை உருட்டிய வலிகள்
மெல்ல விலக‌
பூமித் தொட்டிலில்
தன் எச்சமாய் விழுந்த என்னை
தன் ஈரமுத்தத்தால் சுத்தமாக்கினாள்
"என் அம்மா"
"சிந்து"

குறுங்கவிதை  

குறுங்கவிதை

குறுங்கவிதை

நேர்த்திக்கடன்?

காதல்மழை

அரம் போலும் வாழ்வு

ஆட்டோகிராப்

எங்கே நிம்மதி

மாடுகள் யோசிப்பதில்லை

சிகரம் சிற்றிதழ் -ஜுலை ஆகஸ்ட் 2009

அதிர்ஷ்டம்?

தத்தித் தாவும் தங்கத் தளிரே!

மௌனம் பேசும் வார்த்தை

வாழ்க்கை

அன்புத் தோழியே

முரண்

பயணம் மாத இதழ் (ஜூன்2009)

விவசாயியின் வி()ளைச்சல்

* துளிப்பா

* போர்க்குண விதைகள்

* நல்ல மனிதன்

மழை

சிகரம் சிற்றிதழ் கவிதைகள் (மே- ஜூன் 2009)

* நீல நிலா சிற்றிதழ் கவிதைகள் (ஜூலை 09)

* உறவுகள்

* வாரியா புள்ள வாரியா?

* எரிந்தும் எரியாமலும்

* நான் நதி

* வலி

* அடைமழை

* கறுப்பு நாய்

* ஒரு பின்னரவில்...

* தேயும் வாழ்க்கை

* நிலா

* மாறுபாடுகள்

* புத்தகம்

* துளிப்பா

* உண்ணாவிரதம்

* வாழ்க்கை

* நாட்காட்டி

* விறகோடு உறவாடி

* நீர்க்குமிழி

* அம்மா

* முரண்பாடு

* பூக்களைப் பறிக்காதீர்கள்


சாவிகளால்
முடு்க்கி விடப் படாமல்
இயங்கிக் கொண்டிருக்கின்றது
இன்றைய எனது உலகம்...
.
ஒருக்களித்துக் கிடக்கும்
பொம்மைகள் நடுவில்
மெளனமாய் உறங்கும் பிள்ளை....
பா. தியாகு,
கோயம்புத்தூர், இந்தியா.

குறுங்கவிதை  

கண்ணீர்க் கோடுகளுடன்
பாரம் சுமந்தபடி
கடந்து போனது
நத்தை...
"சக மனிதனைப் போல"

கந்தகப்பூக்கள் யுவபாரதி
சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா.

நேர்த்திக்கடன்?  


அய்யனுக்கு
அபிஷேகம் செய்து...

அம்மனுக்குப்
புடவை சாத்தி...

படை தெய்வங்களுக்குப்
படையலுமிட்டு...

பை உதறி கிளம்பும் போதும்
தெரியவில்லை
வாசல் பிச்சைக்காரியின்
அழுகுரல் மழலை.

யுவபாரதி, சிவகாசி,
தமிழ்நாடு, இந்தியா.

காதல்மழை  


ஒரு

மழையைப் போல்

சட்டெனக்

கரைத்து விட்டாய்!


தேடிக் கொண்டே

இருக்கின்றேன்

என்னை!



ஸ்ரீமதி,

குறிஞ்சிப்பாடி,

கொலுசு S.M.S. இதழ்

அரம் போலும் வாழ்வு  


கோடையின் வெம்மையில்
தார்ச்சாலையில் அமர்ந்து
ஒரு செங்கல்லை இருக்கையாக்கிக்கொண்டு
முழு நீளக் கம்பியினை
ஒரே அளவினாலான
சிறு சிறு துண்டுகளாக
அறுத்துக்கொண்டிருக்கிறார்
காலங்காலமா


பற்கள் தேய்ந்துபோன
ஒரு நாளில்
அவ் அரத்தை
தூக்கியெறிந்துவிடுகிறார்
அரத்தின் முதலாளி


http://thooralkavithai.blogspot.com/

ஆட்டோகிராப்  



குளம் வற்றத்தொடங்கியதும்

ஊர் திரும்பும்
.
அயல் தேசத்து பறவைகள்...

.
கரை நெடுகிலும்

காய்ந்தும், காயாலும்

கையெழுத்திடப் பட்டுருந்தன

"ஆட்டோகிராப்புகள்"

பா. தியாகு,
கோயம்புத்தூர், இந்தியா.

எங்கே நிம்மதி  











.
வாழ்வின் ஆதாரமே

கேள்விக்குறியாய்...

சூழும் துன்பங்களே

சூறாவளியாய்...

.

ஆறாத கடுந்துயரத்தில்

சுழன்று ஆர்ப்பரிக்கும்

கவலைக் கடலலையில்

உடல் நோக

தடம் புரணடு இடந்தெரியாமல்

இன்னலுரும் இழி நிலை

ஈழத்தமிழர் வாழ்வின்

இழிநிலை இன்னமும்...

.

சின்னப்புத்தி சிங்களச் சிப்பாய்களின்

கடுந் தோட்டாக்களுக்கு

சின்னாபின்னமானது

புனிதமான புத்த விகாரமும் தான்..

.

நிராதரவாக ஆதரவி தேடி

ஈழத்து வீதிகளில்

புத்தரே பழுத்த துனபத்துடன்

அலையும் அவல நிலை...

.

ஈழத்து பழச்சந்தையில்

பழக்குவியலுக்குப் பதிலாக

ஈழத்தமிழரின் பிணக்குவியல்கள்...

.

இறந்த ஈழப்பிஞ்சுகளின்

வதைபட்ட பூவுடலைப்

புதைத்திட ஆழ்மயாணத்தில்

சிறிதும் இடமில்லை...

.

ஈழத்துக் குழாய்களில்

குடிநீருக்குப் பதிலாகக்

குமுறும் ஈழத்தமிழரின்

இரத்தப் பிரவாகம்....

.

பிறந்த குழந்தை வாயில்

பாலுக்குப் பதில்

கொல்லப்பட்ட தாயின் இரத்தம்...

.

இருமடங்காய் ஒலிக்கும்

கொதிக்கும் என் இரத்தத்தின் வலி...

என்று மாறும் எம்மக்கள் இழிநிலை...

எழுந்திடு தமிழே... தமிழினமே....

.

கலைத்தாமரை,

மதுரை, தமிழ்நாடு, இந்தியா