முன் பக்கம் கட்டுரை புத்தகங்கள் சிறுகதைகள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம்
*வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்!......*ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது..........வன்னியில் ஆயிரக்கணக்கான தமிழர் சவக்குழிகள்- படுகொலையை அம்பலப்படுத்தும் சாட்டிலைட்கள் ...*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!... *அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்................ மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்களை திருடலாம்-யுஎஸ் விஞ்ஞானிகள்

* மாறுபாடுகள்  


வண்ணப் பூக்கள் வாசம் கண்டு
நாளெல்லாம் நந்தவனம் கிடந்தேன்.
இறுதி ஊர்வலத்தில் இறைந்த
பூக்கள் கண்டு புன்னகை மறந்தேன்.


மழலை மொழி கவிதை கண்டும்
மாசற்ற புன்னகை கண்டும் மகிழ்வில்
புதைந்து போயிருந்தேன்.
பிச்சை புகும் பிஞ்சு கண்டு கலங்கிப் போனேன்.
புன்னகைக்கும் மனிதர் கண்டு பூவாய் மலர்ந்தேன்
முதுகுக்குப் பின் செய்யும் துரோகம் கண்டு
உடைந்து நிற்கின்றேன்.

எஸ். ஜனனி அந்தோணிராஜ், திருச்சி.
சிகரம் சிற்றிதழ். மே- ஜூன் 2009